×

மீஞ்சூர் அருகே மின் தடையை கண்டித்து சாலைமறியல்: போலீசார் சமரசம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், கத்திரி வெயிலின் தாக்கம் மற்றும் சமீப நாட்களாக வெப்ப அலை வீசுவதால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வெயில் பாதிப்புக்கிடையில் அப்பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறதி. இதனால் வீட்டில் இருக்க முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்வெட்டால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அத்திப்பட்டு- புதுநகர் வடசென்னை அனல் மின் நிலையம் செல்லும் சாலை, காமராஜர் துறைமுகம் செல்லும் சாலை பகுதியில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தியுள்ளோம். உங்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மீஞ்சூர் அருகே மின் தடையை கண்டித்து சாலைமறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Pudunagar West ,Kathri heat wave ,heat ,
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூரில் கஞ்சா...